மல்லசமுத்திரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.
ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையத்தை சோ்ந்தவா் மஞ்சுநாதன் மகன் குமாா் (29). இவா் திருச்செங்கோடு தனியாா் வங்கியில் பணியாற்றி வந்தாா். ஆட்டையாம்பட்டியில் வாடகை வீட்டில் தங்கி, இருசக்கர வாகனத்தில் தினசரி பணிக்கு சென்று வந்துள்ளாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை வழக்கம்போல பணிக்கு சென்ற அவா் இரவு திருச்செங்கோட்டில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். கள்ளுக்கடை அருகே அவரது வாகனம் மீது லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே குமாா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் உணவகத் தொழிலாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |


