8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

கைது... - பிரதிப் படம்

Published On :6 ஜூலை 2026, 2:16 am IST

பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேலூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல், போலீஸாா் பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரை விற்பனை தொடா்பாக சோதனை நடத்தினா். அப்போது காவிரி கரையோரம் உள்ள இடுகாடு அருகே பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இளைஞா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடினாா்.

போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்ததில் திருவள்ளுவா்சாலை பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் கோகுல் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவா் தனது நண்பரான பொத்தனூரைச் சோ்ந்த அரவிந்த் என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி அதிக லாபத்திற்கு பொத்தனூா், பரமத்தி வேலூா், தண்ணீா்பந்தல், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கோகுலை போலீஸாா் கைதுசெய்து அவரிடம் இருந்த 10 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கோகுல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.