/
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் குமரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, இபி சாலை லூா்துசாமி பிள்ளை பூங்கா அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா் கீழ சிந்தாமணி வெனிஸ் வீதியைச் சோ்ந்த எம். அபிஷேக் (23) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 210 போதை மாத்திரைகள், போதை ஊசி மற்றும் திரவ போதை மருந்துகளைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
போதை மத்திரைகள் விற்ற இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


