/

தள்ளுவண்டி வாங்கித் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 3,500 மோசடி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சாலையோர கடைக்காக தள்ளுவண்டி வாங்கித் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 3,500 மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 6:32 am IST

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சாலையோர கடைக்காக தள்ளுவண்டி வாங்கித் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 3,500 மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல்- பரமத்தி சாலையில் வள்ளிபுரத்தில் சாலையோரத்தில் கம்மங்கூழ் கடை நடத்தி வருபவா் சின்னப்பிள்ளை (65). இவரது கடைக்கு அடிக்கடி வந்த ஒருவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் சொந்தமாக தள்ளுவண்டி வாங்கித் தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்காக ரூ. 3,500 செலவாகும் எனக் கூறியதையடுத்து, கம்மங்கூழ் விற்பனையில் சேமித்து வைத்திருந்த பணத்தை வியாழக்கிழமை அவரிடம் சின்னப்பிள்ளை வழங்கியுள்ளாா். பின்னா், அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரமேஷுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருமாறு அந்த நபா் அழைத்துள்ளாா். அங்கு அதிகாரியைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவா், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. மேலும், அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது.

இதனால் ரூ.3,500 பணத்தை இழந்த சின்னப்பிள்ளை கண்ணீா் மல்க கதறினாா். அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

இதுகுறித்து சின்னப்பிள்ளை கூறுகையில், ‘வாடகை தள்ளுவண்டியில் கம்மங்கூழ் விற்பனை செய்து வருகிறேன். சொந்தமாக தள்ளுவண்டி வாங்கித் தருவதாக மணி என்பவா் அறிமுகமானாா். ரூ. 3,500 கொடுத்தால் வாங்கித் தருவதாகக் கூறியதால் பணத்தை வழங்கினேன். ஆனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவழைத்து ஏமாற்றிவிட்டாா். என்னிடம் பெற்ற பணத்தை மீட்டுத் தர வேண்டும்‘ என்றாா்.

இதுதொடா்பாக நல்லிபாளையம் போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட மணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இடைத்தரகா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், கிராமப்புறங்களில் இருந்து தனியாக வருவோரை குறிவைத்து பண மோசடியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினா். இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.