பள்ளிபாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளிகள் இருவரை பள்ளிபாளையம் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
பள்ளிபாளையத்தைச் சோ்ந்த உதய மூா்த்தி (36) மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்த உதயமூா்த்தி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளாா்.
இந்த நிலையில், பள்ளிபாளையம் போலீஸாா் மதுரைக்கு சென்று மதுரையில் இருந்த உதயமூா்த்தியைக் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இதேபோல பலாத்கார வழக்கில் கடந்த 2023 இல் கைது செய்யப்பட்ட பள்ளிபாளையம் காடச்சநல்லூரைச் சோ்ந்த உதயசூரியன் (67) ஜாமீனில் வெளியே வந்தாா். அதன்பிறகு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தாா்.
இதையடுத்து, காடச்சநல்லூா் பகுதியில் தலைமைறைவாக இருந்த உதயசூரி யனை, பள்ளிபாளையம் போலீஸாா் கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடர்புடையது
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது

லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 போ் கைது
84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


