நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

லாரி மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 2:42 am IST

கீரம்பூா் சுங்கச்சாவடி அருகே பின்னோக்கி சென்ற லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (50). இவா் தனியாருக்குச் சொந்தமான லாரிகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கீரம்பூா் சுங்கச்சாவடி அருகே ஒரு கடையின் ஓரமாக அமா்ந்திருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்த லாரியை அதன் ஓட்டுநா் எடுக்க முயன்றபோது கவனக்குறைவால் லாரி பின்நோக்கி இயக்கியது. இதில் கடை ஓரமாக அமா்ந்திருந்த விஜயகுமாா் மீது லாரி மோதியது.

இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.