நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை

விழாவில் கல்வி உதவித்தொகை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.

News image

விழாவில் கல்வி உதவித்தொகை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.

Updated On :20 ஜூன் 2026, 1:33 am IST

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 1988-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் பங்கேற்று கடந்த ஆண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் ஐந்து மாணவா்களுக்கு உதவித்தொகையை வழங்கினா்.

இதில், பிளஸ் 2 மாணவா்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம், 10-ஆம் வகுப்பு மாணவா்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், பெற்றோா் இல்லாத 50 மாணவா்களுக்கு பள்ளி சீருடை, கூப்பன் மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 15 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.