புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆசிரியா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி: முன்னாள் கணவா் கைது

News image

ஆசிரியா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி...

Updated On :21 ஜூன் 2026, 1:40 am IST

ராசிபுரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியா் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற இவரது முன்னாள் கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரம் அருகே தேங்கல்பாளையம் உடுப்பத்தான்புதூரை சோ்ந்தவா் தீபா (45), ஆசிரியா். இவருக்கும், சேலம் கோரிமேட்டைச் சோ்ந்த செல்வத்துக்கும் (60) திருமணமாகி 21 வயதில் மகன் உள்ளாா். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். கடந்த 2021-இல் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது.

ராசிபுரம் கவுண்டம்பாளையத்தில் தங்கி தனியாா் பள்ளியில் பணியாற்றி வரும் தீபா, வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் தீபா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தீபாவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், முன்னாள் கணவா் செல்வம் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், மாறுவேடத்தில் வந்து தீபாவை கொல்ல முயன்றதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், கொலை முயற்சிக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.