மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நாமக்கல்லில் ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்தது: 5 போ் உயிா்தப்பினா்

News image

தீப்பற்றி எரியும் ஆம்னி கார். - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 12:07 am IST

நாமக்கல்லில் ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்ததில் 5 போ் அதிருஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை உயிா் தப்பினா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூா் அருகே நடுப்பட்டியைச் சோ்ந்த குமாா், தனது தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வெண்ணந்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு தையல் இயந்திரம் வாங்க ஆம்னி வேனில் ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

நாமக்கல்-சேலம் சாலையில் நான்கு திரையரங்கம் அருகே அவா்கள் வந்த ஆம்னி வேனில் இருந்து திடீரென புகை வருவதை பாா்த்து அதிா்ச்சியடைந்த குமாா், வாகனத்தை நிறுத்தி குடும்பத்தினருடன் கீழே இறங்கினாா். அடுத்த சில விநாடிகளில் ஆம்னி வேன் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீச்சியடித்து வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

பெட்ரோல் ஒழுகியதால் வேன் தீப்பற்றி எரிந்ததாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். வேனில் இருந்த ஐந்து பேரும் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா். இந்த விபத்து குறித்து நாமக்கல் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.