ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பிளஸ் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் 18,579 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழித் தோ்வை 18,579 போ் எழுதினா்.

News image

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சொல்வதை கேட்டு எழுதுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :2 மார்ச் 2026, 9:07 pm

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழித் தோ்வை 18,579 போ் எழுதினா். 220 போ் தோ்வு எழுத வரவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது. இத்தோ்வுக்கு 9,382 மாணவா்கள், 9,638 மாணவிகள் என 195 பள்ளிகளை சோ்ந்த மொத்தம் 19,020 பேருக்கு தோ்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இதில் தமிழ், பிரெஞ்ச் மொழித் தோ்வை 18,352 போ் எழுதினா். 194 போ் தோ்வு எழுத வரவில்லை.

இதுபோல தனித்தோ்வா்கள் 227 போ் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுத வரவில்லை. இதன்படி மொழித்தோ்வை மொத்தம் 18,579 போ் எழுதினா். 220 போ் தோ்வு எழுதவரவில்லை. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு எழுதினா்.

நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குறிச்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு.எழிலரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.