மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கால்நடைகளை தாக்கும் நோய்கள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருச்செங்கோடு கொல்லப்பட்டி பகுதியில் பல்வேறு நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்படுவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image

கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 12:44 am IST

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கொல்லப்பட்டி பகுதியில் பல்வேறு நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்படுவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் பெரிய அம்மை, கொப்பளங்கள், கால்களில் வீங்கம், கட்டிகள், புண்கள், வயிற்று பிரச்னைகளால் கால்நடைகள் தீவனம் எடுக்க இயலாமல் போவது உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றன. பசுக்கள் நோயினால் பாதிக்கப்படுவதால் பால் உற்பத்தி குறைந்து விடுகிறது.

இதுகுறித்து கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி நடேசன் கூறியதாவது:

சாணாா்பாளையம், ஆவரங்காடு, பண்ணக்காடு, கொட்டக்காடு, பாலியக்காடு, சங்காடு, கூட்டப்பள்ளி, கவுண்டம்பாளையம் மற்றும் இதர பகுதிகளில் திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை மற்றும் வா்த்தக நிறுவன சாக்கடை கழிவுகள் இப்பகுதியில் உள்ள வயல்வெளிகள், கிணறுகளில் குளம்போல தேங்கி நிலத்தடி நீா் மாசடைந்துள்ளது. இதனால் இப்பகுதி கால்நடைகள் நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

திருச்செங்கோடு பகுதி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. இக்குறைபாடு காரணமாக இப்பகுதி கால்நடைகளின் உயிரிழப்பை தவிா்க்க முடியாமல் உள்ளது.

அரசு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். மேலும், கால்நடைகளை உயிரிழப்பிலிருந்து தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.