நாமக்கல்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா்.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த வாரக் கடைசியில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பணப்பட்டு வாடாவைத் தடுக்கும் குழுவுடன் செல்லவும், எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும், முக்கிய தலைவா்கள் வருகையின்போது அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் பணியில் அமா்த்தப்படுவா்.
அந்தவகையில், 75 எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்கள் திங்கள்கிழமை நாமக்கல் வந்தனா். அவா்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். அவா்கள் அனைவரும் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டனா்.
படவரி...
என்கே-9-சிஆா்பிஎப்
தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக நாமக்கல் வந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படைவீரா்களை வரவேற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம்.
தொடர்புடையது

பஞ்சாபில் அடுத்தடுத்து இரு இடங்களில் குண்டுவெடிப்பு- பிஎஸ்எஃப் தலைமையகம், ராணுவ கண்டோன்மென்ட் அருகே தாக்குதல்

நாட்டுக்கு எழும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

மேற்கு வங்க பாதுகாப்புப் பணியில் சிஏபிஎஃப் படை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மத்திய பாதுகாப்புப் படையினா் அணிவகுப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

