சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்ட எல்லைகள், பரமத்தி வேலூா் காவிரி பாலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடைபெறும் வாகனச் சோதனைகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினா் பணம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 180 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு ஆவணங்கள் இன்றி எடுத்துவரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதுவரை மாவட்டத்தில் ரூ. 23.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்- திருச்சி, நாமக்கல்- கரூா், நாமக்கல்- சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாகனச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி, பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட படமுடிபாளையம் ஆகிய மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

தருமபுரியில் தோ்தல் மாரத்தான் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

பரமத்தி வேலூா் பகுதியில் வாகன சோதனை பணிகளை நாமக்கல் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


