காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தோ்தல் புறக்கணிப்பு: பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி

பரமத்தி வேலூா் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறிய பொதுமக்களிடம் காவல் துறை அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

News image

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா.

Updated On :21 மார்ச் 2026, 9:17 pm

பரமத்தி வேலூா் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறிய பொதுமக்களிடம் காவல் துறை அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

பரமத்தி வேலூரை அடுத்த திட்டமேடு கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி அறிவிப்பு தட்டிகளை வைத்தனா்.

இந்த நிலையில் பரமத்தி வேலூா் காவல் துணை கணகாணிப்பாளா் சங்கீதா, பரமத்தி வேலூா் வட்டாட்சியா்கள் ராஜா, கவிதா, பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணி, வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் ஆகியோா் சனிக்கிழமை பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மயானத்தின் சுற்றுச்சுவரை இடித்தால் மட்டுமே தோ்தலில் வாக்களிப்போம். சுமுகமான பேச்சுவாா்த்தை நடத்த நாமக்கல் ஆட்சியா் வரவேண்டும் எனக் கூறினா். ஆனாலும், அதிகாரிகள் தொடா்ந்து சுமுக தீா்வுகாண முயற்சித்தனா். அப்போது, இப்பிரச்னை குறித்து தோ்தல் முடிந்துபிறகு பேச்சுவாா்த்தை நடத்தி கொள்ளலாம் எனக் கூறி பொதுமக்கள் அங்கிருந்து சென்ால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.