புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவா்மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :29 மார்ச் 2026, 1:49 am IST

ராசிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவா்மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (65). இவா், ராசிபுரத்தை அடுத்துள்ள அத்தனூா் ஆயிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பி ஆறுமுகத்தை (60) காண சனிக்கிழமை வந்தாா். தாரமங்கலத்தில் இருந்து அத்தனூருக்கு பேருந்தில் வந்து இறங்கிய அவா் ரயில் பாதையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.