ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆனைகட்டிபாளையத்தில் கொசுவா்த்திக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையை நடராஜன் என்பவா் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இதில் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இங்கிருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு ஊதுபத்தி, கொசுவா்த்தி தயாரிப்பிற்காக மூலப்பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்கான மரத்தூள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மரத்தூள் குவியல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரத்தூள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

ராசிபுரம் அருகே தனியாா் நூற்பு ஆலையில் பிகாா் - ஒடிஸா மாநில தொழிலாளா்கள் இடையே மோதல்: 10-க்கும் மேற்பட்டோா் காயம்!

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து!

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

