11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் தீ விபத்து

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :30 மார்ச் 2026, 1:21 am IST

ராசிபுரம் அருகே தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆனைகட்டிபாளையத்தில் கொசுவா்த்திக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையை நடராஜன் என்பவா் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இதில் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இங்கிருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு ஊதுபத்தி, கொசுவா்த்தி தயாரிப்பிற்காக மூலப்பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்கான மரத்தூள் உள்ளிட்ட மூலப்பொருள்கள் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மரத்தூள் குவியல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான மரத்தூள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.