ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ராசிபுரம் அருகே இறந்த கோழிகள் பண்ணைக்குள் குழிதோண்டி புதைப்பு

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

News image

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் புதைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள இறந்த கோழிகள்

Updated On :31 மார்ச் 2026, 8:03 pm

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட 10--ஆவது வாா்டில் பெரிய ஏரி வயக்காடு பகுதி உள்ளது. இங்குள்ள கோழிப் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை தனியாா் நிறுவனம் வளா்த்து வருகிறது.

கடந்த சில நாள்களாக இந்த பண்ணையில் தினசரி நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த கோழிகள் பண்ணையில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், உரிய வகையில் கோழிகள் நீா் பருகாததாலும் இறக்க நேரிட்டது என்றனா்.