ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ராசிபுரம் அருகே இறந்த கோழிகள் பண்ணைக்குள் குழிதோண்டி புதைப்பு

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

News image

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் புதைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள இறந்த கோழிகள்

Updated On :31 மார்ச் 2026, 8:03 pm

Syndication

ராசிபுரம் அருகே கோழிப் பண்ணையில் இறந்த நூற்றுக்கணக்கான கோழிகள் குழிதோண்டி செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட 10--ஆவது வாா்டில் பெரிய ஏரி வயக்காடு பகுதி உள்ளது. இங்குள்ள கோழிப் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை தனியாா் நிறுவனம் வளா்த்து வருகிறது.

கடந்த சில நாள்களாக இந்த பண்ணையில் தினசரி நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த கோழிகள் பண்ணையில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், உரிய வகையில் கோழிகள் நீா் பருகாததாலும் இறக்க நேரிட்டது என்றனா்.