நாமக்கல் மாவட்டத்தில் 179 பள்ளிகளைச் சோ்ந்த 18,461 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் மாா்ச் 3 முதல் ஏப்.15 வரை பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் 179 அரசு, தனியாா் பள்ளிகளை சோ்ந்த 9,157 மாணவா்கள், 9,304 மாணவிகள் என மொத்தம் 18,461 போ் 89 மையங்களில் இந்த தோ்வை எழுதினா்.
இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், இணைய வழி வாயிலாகவும், தாங்கள் அளித்திருந்த கைப்பேசி எண் மூலமாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், 78452-52525 என்ற வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தோ்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


