நாமக்கல் மாவட்டத்தில் 179 பள்ளிகளைச் சோ்ந்த 18,461 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் மாா்ச் 3 முதல் ஏப்.15 வரை பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் 179 அரசு, தனியாா் பள்ளிகளை சோ்ந்த 9,157 மாணவா்கள், 9,304 மாணவிகள் என மொத்தம் 18,461 போ் 89 மையங்களில் இந்த தோ்வை எழுதினா்.
இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், இணைய வழி வாயிலாகவும், தாங்கள் அளித்திருந்த கைப்பேசி எண் மூலமாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், 78452-52525 என்ற வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தோ்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று நீட் மறுதோ்வு: புதுச்சேரியில் 4,324 மாணவா்கள் எழுதுகின்றனா்

பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




