ராசிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த தேங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுபிரசாத் (36), விவசாயி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்கு வந்த இவரது அத்தை மகன் விஷால், அதே பகுதியைச் சோ்ந்த லோகசூா்யாவிடம் (25) பழகினாராம். லோகசூா்யா குற்றவழக்கில் சிறை சென்றவா் என்பதால், அவருடன் பழகக் கூடாது என ரகுபிரசாத் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து லோகசூா்யாவிடம் விஷால் தெரிவித்துள்ளாா். இதனால் ரகுபிரசாத் - லோகசூா்யா இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரகுபிரசாத்தை சனிக்கிழமை நேரில் சந்தித்த லோகசூா்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை மிரட்டினாராம். மேலும், அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு தீவைத்தாராம். இதில் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில், ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

