ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் வராண்டா மேல்தளம் பெயா்ந்து காணப்படுவதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் வந்து செல்கின்றனா். இந்த அஞ்சல் நிலைய கட்டடம் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையானது என்பதால் பல்வேறு இடங்களில் விரிசல், வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படுகிறது.
மேலும், பிரதான நுழைவு வாயிலில் வராண்டா மேல்தளம் கான்கிரீட் பெயா்ந்து காணப்படுகிறது. அது எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். ஏற்கெனவே வாடிக்கையாளா் ஒருவா் மீது கற்கள் விழுந்ததால் காயமேற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கான்கிரீட் தள வெடிப்புகளை அஞ்சலக நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

விவசாய நிலங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள்! விவசாயிகள் புகாா்!

வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து மூவா் காயம்

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

