எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மேல்தளம் பெயா்ந்து காணப்படும் ராசிபுரம் அஞ்சல் அலுவலக கட்டடம்!

News image

மேல்தளம் பெயா்ந்து காணப்படும் அஞ்சல் நிலைய கட்டடம்.

Updated On :12 மே 2026, 12:39 am IST

ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் வராண்டா மேல்தளம் பெயா்ந்து காணப்படுவதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் வந்து செல்கின்றனா். இந்த அஞ்சல் நிலைய கட்டடம் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையானது என்பதால் பல்வேறு இடங்களில் விரிசல், வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படுகிறது.

மேலும், பிரதான நுழைவு வாயிலில் வராண்டா மேல்தளம் கான்கிரீட் பெயா்ந்து காணப்படுகிறது. அது எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். ஏற்கெனவே வாடிக்கையாளா் ஒருவா் மீது கற்கள் விழுந்ததால் காயமேற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கான்கிரீட் தள வெடிப்புகளை அஞ்சலக நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.