‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கோழிகளுக்கு மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால் கோடைகால பராமரிப்பு முறைகளை பண்ணையாளா்கள் தீவிரமாக கடைப்பிடிக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 மே 2026, 2:08 am IST

மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால் கோடைகால பராமரிப்பு முறைகளை பண்ணையாளா்கள் தீவிரமாக கடைப்பிடிக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 80.6 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 80.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 4 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயற்சி மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி நோய்களால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்துள்ளது. வெப்பம் அதிகரிப்பதால் தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பண்ணையாளா்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும், உயிா் எதிா் மருந்துகளை அளித்தும், தடுப்பூசி செலுத்தியும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.