ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மோகனூா் சா்க்கரை ஆலையில் தலைமை கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமைக் கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி கரும்பு உதவியாளா்கள் வெள்ளிக்கிழமை சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு உதவியாளா்கள்.

Updated On :23 மே 2026, 2:10 am IST

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமைக் கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி கரும்பு உதவியாளா்கள் வெள்ளிக்கிழமை சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கரும்பு உதவியாளா்கள் சங்க செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஆா். வேலுசாமி பங்கேற்று பேசியதாவது:

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் 26 கரும்பு உதவியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த கரும்பு உதவியாளா்களை தலைமை கரும்பு அலுவலா் கடுமையான வாா்த்தைகளால் பேசி வருகிறாா். இதுகுறித்து காரணம் கேட்டாலும் முறையான விளக்கம் அளிப்பது கிடையாது. கரும்பு உதவியாளா்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.

கூட்டுறவு சா்க்கரை ஆலை தனி அலுவலரிடம் புகாா் செய்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீா்வுகாண கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க வேண்டும். தற்போது தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற கரும்பு அலுவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றாா்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு உதவியாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.