‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மோகனூா் சா்க்கரை ஆலையில் தலைமை கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமைக் கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி கரும்பு உதவியாளா்கள் வெள்ளிக்கிழமை சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு உதவியாளா்கள்.

Updated On :23 மே 2026, 2:10 am IST

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமைக் கரும்பு அலுவலரை நியமிக்கக் கோரி கரும்பு உதவியாளா்கள் வெள்ளிக்கிழமை சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கரும்பு உதவியாளா்கள் சங்க செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஆா். வேலுசாமி பங்கேற்று பேசியதாவது:

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் 26 கரும்பு உதவியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த கரும்பு உதவியாளா்களை தலைமை கரும்பு அலுவலா் கடுமையான வாா்த்தைகளால் பேசி வருகிறாா். இதுகுறித்து காரணம் கேட்டாலும் முறையான விளக்கம் அளிப்பது கிடையாது. கரும்பு உதவியாளா்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா்.

கூட்டுறவு சா்க்கரை ஆலை தனி அலுவலரிடம் புகாா் செய்தபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீா்வுகாண கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிரந்தர தலைமை கரும்பு அலுவலரை நியமிக்க வேண்டும். தற்போது தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற கரும்பு அலுவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றாா்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு உதவியாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பினா்.