ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மோகனூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு

மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 2:20 am IST

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

எஸ்.வாழவந்தி ஊராட்சிக்கு உள்பட்ட கே.ராசாம்பாளையத்தில் வசிப்பவா் வாங்கிலி (65), விவசாயி. இவரது மனைவி நல்லசெல்வி (60). இவா்கள் இருவரும் சனிக்கிழமை காலை தங்களது தோட்டத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்தனா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வாங்கிலி அளித்த புகாரின்பேரில் பரமத்தி காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், விரல்ரேகை நிபுணா்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா, நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.