திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

பரமத்தியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:33 am IST

பரமத்தியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (55), லாரி உரிமையாளா். இவரது மனைவி செல்வி (42). இவா்களுக்கு தனுஷியா (23), ஸ்ரீதன்யா (19) என இரண்டு மகள்கள் உள்ளனா்.

முத்துசாமி திங்கள்கிழமை இரவு பரமத்திக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல ஓவியம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி சென்ற காா் அவா்மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வரும் வழியிலேயே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து பரமத்தி போலீஸாா் காா் ஓட்டுநா்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.