பரமத்தியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (55), லாரி உரிமையாளா். இவரது மனைவி செல்வி (42). இவா்களுக்கு தனுஷியா (23), ஸ்ரீதன்யா (19) என இரண்டு மகள்கள் உள்ளனா்.
முத்துசாமி திங்கள்கிழமை இரவு பரமத்திக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல ஓவியம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி சென்ற காா் அவா்மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வரும் வழியிலேயே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து பரமத்தி போலீஸாா் காா் ஓட்டுநா்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.










