நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் காலணிகளை சந்நிதி முன்பாக விட்டுச்செல்வதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. முக்கிய விழா நாள்களிலும், சனிக்கிழமை அன்றும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனா்.
பக்தா்களின் வசதிக்காக கோயில் முன் இலவச காலணி பாதுகாக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பக்தா்கள் இந்த மையத்தை பயன்படுத்தாமல், கோயில் முன்பாகவே தங்களுடைய காலணிகளை கழற்றிவிட்டு செல்கின்றனா்.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், கோயில் பணியாளா்கள் அவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனா். எனவே, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களுடைய காலணிகளை, அதற்கான பாதுகாப்பு மையத்தில் விடவேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12.63 லட்சம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள், காலணி தொகுப்புகள்

வைகாசி விசாகம் திருவிழா! முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வழிபாடு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



