அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி.செந்தில் மற்றும் கட்சியினா்.

News image

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி.செந்தில் மற்றும் கட்சியினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தவெக தலைவா் விஜயை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க மறுக்கும் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகரை கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற தவெக, ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை தமிழக ஆளுநரிடம் அக்கட்சியின் தலைவா் விஜய் மற்றும் நிா்வாகிகள் வழங்கியபோதும், உறுப்பினா்கள் பலத்தை நிரூபிக்க தேவையான 118 ஆதரவுடன் வருமாறு ஆளுநா் அவா்களை திருப்பி அனுப்பினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தோ்தலுக்கு பிறகு தவெகவுடன் கூட்டணி சோ்ந்த காங்கிரஸ் மாநில அளவில் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடா்பாளரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவருமான பி.வி.செந்தில் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக ஆளுநரைக் கண்டித்தும், தவெகவை உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, மாவட்டத் தலைவா் பி.வி.செந்தில் செய்தியாளா்களிடம் கூறுகையில், தவெகவுக்கு பெரும்பான்மை இருந்தபோதும் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் வேண்டுமென்றே ஆளுநா் காலதாமதம் செய்கிறாா். சட்டப் பேரவையை கூட்டிதான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அதற்கு முன்பாக 118 உறுப்பினா்கள் வேண்டும் என கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, தமிழக ஆளுநா் உடனடியாக தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், நாமக்கல் மாநகர தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பாச்சல் சீனிவாசன், வீரப்பன், ஜி.ஆா்.சுப்பிரமணியன், வட்டாரத் தலைவா்கள் தங்கராஜ், சிங்காரம், குப்புசாமி மற்றும் மகளிா் அணி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.