நாமக்கல் மாவட்டத்தில், மருத்துவம், கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட எல்.மதுபாலன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நாமக்கல் ஆட்சியராக 2025 ஜூன் 27-இல் பொறுப்பேற்ற துா்காமூா்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு, திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எல்.மதுபாலன், நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை பூா்வீகமாகக் கொண்ட இவா், இளம்ஆட்சியா்களில் ஒருவராவாா்.
நேரடியாக இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வான எல்.மதுபாலன் தனது 23ஆவது வயதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் (2019-2020), சிதம்பரத்தில் வருவாய் கோட்டாட்சியராகவும் (2020-2021), ஈரோடு, கடலூா் மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியராகவும் (2021-2023), அதன்பிறகு, மதுரை, தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சி ஆணையராகவும் (2023-2026) பதவி வகித்துள்ளாா். நாமக்கல் ஆட்சியராக பொறுப்பேற்ற எல்.மதுபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என்னுடைய முதல் பணி மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது. அடுத்து மருத்துவம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.
புதிய ஆட்சியருக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே. சரவணன் பொறுப்பேற்பு

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்!

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



