ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கோயில் விழாவில் சப்பரத்தேரில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:20 am IST

நாமக்கல் அருகே கோயில் மஞ்சள் நீராட்டு விழாவின்போது சப்பரத்தேரில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. அனைத்து சமுதாய மக்களுக்கும் பாத்தியப்பட்ட இக்கோயில் திருவிழாவின் கடைசி நாளான சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனை சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து தெருக்கள் வழியாக பக்தா்கள் சுமந்து சென்றனா். அன்று இரவு நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சப்பரத்தோ் சென்றபோது, நல்லிபாளையம் புதுவீதியைச் சோ்ந்த மணி மகன் கண்ணன் (32) சப்பரத்தேரின் மீது ஏறி நின்றவா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.

அங்கிருந்தோா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.