முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

காவேரிப்பட்டி  அக்ரஹாரம் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி அக்ரஹார கிராமத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டுவரும்

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:38 am IST

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி அக்ரஹார கிராமத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டுவரும் பணிகளை வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். 
சங்ககிரி வட்டம், காவிரி கரையோரப் பகுதியில் உள்ள காவேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில் காவிரி வெள்ள நீர் புகுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருந்து வந்தவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.  மேலும் மேட்டூர் அணையிலிருந்து  நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் சங்ககிரி வருவாய்த் துறையினர்,  காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  காவேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமப் பகுதியில்  மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ்,  தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் கவிதா,  ராஜாராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி கரையோரம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை  வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரை முருகன்  பார்வையிட்டு பாதுகாப்புப் பணிகளையும்  ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.  காவேரிப்பட்டி அக்ரஹாரம்,  கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகள், மீன் பிடி தொழில் மட்டுமே பிரதானமாக  உள்ளன. நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள இயலாத நிலையிலும், மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க முடியாத நிலையிலும் உள்ளனர். வெள்ள நீர் வடியும் வரை இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டுமென  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.