தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆத்தூரில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

ஆத்தூர்  கோட்டாட்சியர் அலுவலகம் முன் மூவர் தீக்குளிக்க  முயற்சித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 3:56 am

ஆத்தூர்  கோட்டாட்சியர் அலுவலகம் முன் மூவர் தீக்குளிக்க  முயற்சித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூரை அடுத்த மஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராமலிங்கம், கஞ்சமலை கோனார் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் குடும்பங்களுக்குச்  சொந்தமான  விவசாய நிலத்தை  தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 1986-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. நிலங்களுக்கான சந்தை மதிப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்கள் பெற மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து போராடியும் நிலத்தை தர மறுத்தால் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த  19 பேரில் 3 பேர் தங்கள்  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைக்க முயற்சித்தனர்.இதனை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அவர்களை   அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.