புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மரவள்ளிக் கிழங்கில் வெள்ளைப்படுதல் நோய்த் தாக்குதல் அதிகரிப்பு

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக்

News image
Updated On :14 மே 2018, 9:08 pm

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது ஏராளமான விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டுள்ளனர். அவைகள் நன்கு வளரத் தொடங்கியுள்ள நிலையில் மரவள்ளியில் தற்போது வெள்ளைப்படுதல் எனப்படும் நோய்த் தாக்கி வருகிறது.
இதனால் பச்சையாக இருக்கும் அதன் இலைகள், வெள்ளையாக மாறி வருகிறது. இந்த நோயால் வேர்ப் பகுதியில் சேகரமாகும் கிழங்கு, பிடிப்பு இல்லாமல், எடையின்றி காணப்படும். பத்து மாதங்களுக்குப் பின், கிழங்கை அறுவடை செய்யும்போது மகசூல் பாதியாக காணப்படும். விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும்.
இதுகுறித்து கிழங்கு விவசாயிகள் கூறியதாவது: தோட்டக்கலை அதிகாரிகளோ, வேளாண் அதிகாரிகளோ, வெள்ளைப்படுதல், நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தடுப்பு முறைகளைத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.