மேட்டூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த இரு இளைஞர்களை ஜலகண்டபுரம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கட்டிநாயக்கன் பட்டியில் ஜலகண்டபுரம் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை திருப்பிகொண்டு செல்ல முயன்றனராம். அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் இருப்பாளி கிராமத்தை சேர்ந்த தங்கமணி மகன் சுரேஷ் (25), கே.ஆர்.தோப்பூர் காடக்காரனூரை சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஜலகண்டபுரத்தில் திருடியது என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் காவல் நிலையப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு அடகு வைத்ததும், விறபனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்களை மீட்டனர். தொடர்ந்து, இருரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

விருச்சிக ராசிக்கு உற்சாகம்: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 10 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு தைரியம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
