ஏற்காட்டில் பணத்தகராறில் அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சி செங்கலத்துப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னமணியன் மகன் பாலகிருஷ்ணன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேலிடம் சில்வர் ஓக் மரம் தருமாறு ஓர் ஆண்டுக்கு முன் ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் மரம் தராததையடுத்து, பாலகிருஷ்ணன் பலமுறை தங்கவேலிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் இருவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, பாலகிருஷ்ணன் தனது வீட்டில் முகம் கழுவிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த தங்கவேல் அரிவாளால் பாலகிருஷ்ணனின் கழுத்தில் வெட்டியுள்ளார். காயமடைந்த பாலகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து தங்கவேலை (55) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


