ஆத்தூரில் பெரியார் சிலையை அமைக்க மாற்று இடத்தை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் கடந்த 1981 செப். 17-ஆம் தேதி பெரியார் சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கருதி வந்த நிலையில், சமூக ஆர்வலர் செல்வராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 3 வார காலத்துக்குள் பெரியார் சிலையை மாற்றி அமைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப்பொறியாளர் ராதாகிருஷ்ணன், ஆத்தூர் வட்டாட்சியர் செல்வம், ஆத்தூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி, உதவி பொறியாளர் கவிதா, நகரமைப்பு அலுவலர் வி.முருகன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் டி.வானவில், அண்ணாதுரை,விடுதலைச் சந்திரன் ஆகியோர் ஆட்சியரின் உத்தரவு படி, தற்போது உள்ள இடத்தில் இருந்து சற்று பின்னால் தள்ளி சிலை வைக்க இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவை அதிமுக குழு தலைவா் யாா்? ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு!

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
