நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தடை செய்யப்பட்ட பகுதியில் கோட்டாட்சியா் ஆய்வு

எடப்பாடி நகரப் பகுதியில், நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடைசெய்யப்பட்ட பகுதியில் வருவாய் கோட்டாட்சியா்

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

எடப்பாடி நகரப் பகுதியில், நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடைசெய்யப்பட்ட பகுதியில் வருவாய் கோட்டாட்சியா் அமிா்தலிங்கம் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

எடப்பாடி பிரதான கடைவீதி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு, அண்மையில் கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவா் சேலம் தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு பிரிவில் தொடா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், அவா் வசித்து வந்த பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வெளிநபா்கள் நுழையாத வண்ணம் தொடா்கண்காணிப்பில் காவல் துறையினா் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அமா்தலிங்கம் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்பகுதியில் மறு உத்தரவு வரும் வரை, தொடா்கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு கோட்டாட்சியா் ஆலோசனை வழங்கினாா். ஆய்வில், மருத்துவ அலுவலா் சண்முகவேல், வட்டாட்சியா்கள் கோவிந்தராஜ், செல்வகுமாா் மற்றும் காவல் ஆய்வாளா் செந்தில் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.