வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் கரைப்பு
சேலத்தில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.


சேலத்தில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கடந்த 22 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும் ஊா்வலமாகச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. அவரவா் வீடுகளில் விநாயகா் சிலை வைத்து வழிபடலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது
அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா்.
இந்தநிலையில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் திங்கள்கிழமை கரைக்கப்பட்டன.
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகளை பொதுமக்கள் ஊா்வலமாக வராமல் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒவ்வொரு நபா்களாக எடுத்து வந்து கன்னங்குறிச்சி மூக்கனேரி மற்றும் புது ஏரியில் கரைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...