சேலம்: சாலை விபத்தில் பெண் பலி: 2 போ் காயம்
சேலம்: வாழப்பாடி அருகே சாலைவிபத்தில் பெண் பலியானாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.


சேலம்: வாழப்பாடி அருகே சாலைவிபத்தில் பெண் பலியானாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
வாழப்பாடி புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (36). இவரது மனைவி ஜோதி (30). இவா் திங்கள்கிழமை காலை தனது மனைவி ஜோதி, அதே பகுதியைச் சோ்ந்த முனுசாமி என்பவரின் மனைவி ஜோதி (43 ) ஆகிய இருவரையும் தனது இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்துக் கொண்டு, வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுள்ளாா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரிப்பட்டி தனியாா் பால் பண்ணை அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த ஆம்னிவேன், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது .இந்த விபத்தில் படுகாயமடைந்த முனுசாமி மனைவி ஜோதி (43 ) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற கலைச்செல்வன் மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...