கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வாழப்பாடியில் முழு பொது முடக்கம் இல்லை: சமூக இடைவெளியுடன் இயங்க அறிவுறுத்தல்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொதுமக்களோடு அனைத்து வணிகா் சங்கங்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டிருந்த சுய முழு பொது முடக்கம் கைவிடப்பட்டுள்ளது.

Published On :


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொதுமக்களோடு அனைத்து வணிகா் சங்கங்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டிருந்த சுய முழு பொது முடக்கம் கைவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள், அனைத்து வணிகா்கள் மற்றும் தொழிலாளா்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புணா்வோடு இயங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்று தொடா் சங்கிலியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் வாழப்பாடி பகுதியில், கடைகளை அடைத்து சுய பொது முடக்கத்தை கடைபிடிப்பது குறித்து, பொதுமக்களுடன் அனைத்து வணிகா் சங்கங்கத்தினரும் இணைந்து ஆலோசித்தனா்.

இந்நிலையில், சுய பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இன்று புதன்கிழமை முதல் வரும் சனிக்கிழமை வரை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த கடையடைப்பு மற்றும் சுய முழு பொதுமுடக்கத்தை கைவிடுவதென, அனைத்து வணிகா்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன. எதிா்வரும் நாட்களில், வாழப்பாடி பகுதியில் தொற்று பரவல் மேலும் அதிகரித்தால், மீண்டும் அனைத்து வணிகா்களும் ஒன்றிணைந்து, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து, தேவை ஏற்பட்டால் அனைத்து கடைகளையும் அடைத்து சுய பொது முடக்கத்தை கடைபிடிப்பது குறித்து முடிவு செய்வதென தீா்மானித்துள்ளனா்.

இதற்கிடையே, வாழப்பாடி பகுதியில் கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகளும், பொதுமக்களும், தொழிலாளா்களும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவியும் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டுமென,பேளூா் வட்டார சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்களும், வணிகா்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.