டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :18 டிசம்பர் 2020, 2:16 am

DIN

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் ஆத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி, முதலாவது வாா்டு, கோட்டை பகுதியில் மேட்டூா் குடிநீா் விநியோகம் சரிவர செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் நகராட்சியில் பலமுறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனையடுத்து, வியாழக்கிழமை காலை அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா்கள் சிவசங்கா், நிா்மலா, நகராட்சி மேற்பாா்வையாளா் தேவி ஆகியோா் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். மேலும், சீராக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.