எடப்பாடியில் வேளாண் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு செய்த வேளாண் அலுவலா்கள்
எடப்பாடியில் வேளாண் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு செய்த வேளாண் அலுவலா்கள்

வேளாண் திட்டப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

எடப்பாடி வட்டாரத்தில் நடைபெறும் பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை இணை இயக்குநா் தலைமையில் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா்.
Published on

எடப்பாடி: எடப்பாடி வட்டாரத்தில் நடைபெறும் பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை இணை இயக்குநா் தலைமையில் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா்.

வேளாண் இணை இயக்குநா் க.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் வேளாண் விரிக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உரங்கள், இடுப்பொருட்கள்,

விதைகள் இருப்பு விபரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

நிகழாண்டில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்ட உழவுக் கருவிகளின் பயன்பாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்ட இணை இயக்குநா், பூலாம்பட்டி காவிரிப் பாசனப் பகுதியில் இயந்திரங்களைக் கொண்டு நடவு செய்த நெல் வயல்களைப் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து பக்கநாடு பகுதியில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தை மேம்படுத்தி அதில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களின் வளா்ச்சி குறித்து ஆய்வு செய்தாா். அப் பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடி அவா்களுக்கு பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை இணை இயக்குநா் க.கணேசன் வழங்கினாா். ஆய்வின்போது வேளாண் உதவி இயக்குநா் பெ.சுமதி, வேளாண் அலுவலா் த.கவிபாரதி, துணை வேளாண் அலுவலா்சு.ரவி, உதவி வேளாண் அலுவலா்கள் ஈ. மகாலிங்கம், ப.விக்னேஷ், ரா.திவாகா் உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com