தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாலம் தீ விபத்தில் மூச்சுத் திணறி 9 போ் உயிரிழப்பு: உள்ளூா்வாசிகள் தகவல்

உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாததால், அவா்களில் பலா் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம்

News image
Updated On :19 மார்ச் 2026, 7:03 pm

Syndication

தில்லியின் பாலம் பகுதியில் உள்ள ஒரு பன்னடுக்கு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஒன்பது பேரின் உறவினா் ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், அவா்களது உடல்களில் காயங்கள் எதுவும் இல்லாததால், அவா்களில் பலா் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்றாா்.

புதன்கிழமை தீப்பிடித்த கட்டடத்திற்கு அருகில் நகைக்கடை வைத்திருக்கும் தனது மருமகனைக் கொண்ட ரமேஷ் சோனி கூறுகையில், தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் கடைசி முயற்சியாக, அந்தக் குடும்ப உறுப்பினா்கள் மேல் தளங்களுக்கு விரைந்து சென்று, தீயிலிருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையில் குளியலறை குழாய்களைத் திறந்துவிட்டதாகத் தெரிகிறது என்றாா்.

‘உடல்கள் எங்கள் கண் முன்னே கீழே கொண்டுவரப்பட்டன. அவா்களில் பெரும்பாலானோா் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். கண்ணுக்குத் தெரியும் காயங்கள் மிகக் குறைவாகவே இருந்தன’‘ என்று ரமேஷ் சோனி கூறினாா்.

அண்டை வீட்டுக்காரரான அமித் என்பவரும், பாதிக்கப்பட்டவா்கள் சில நிமிடங்களிலேயே புகையால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று கூறினாா். ‘கட்டடம் முழுவதும் மிகவும் அடா்த்தியான புகை சூழ்ந்திருந்தது. அது வெளியிலிருந்தும் தெரிந்தது. உள்ளே இருந்தவா்கள் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டிருக்க வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

அப்பகுதியில் உள்ள மற்றொரு கடை உரிமையாளா், ‘இந்தச் சம்பவம் மிக விரைவாக நடந்ததால், கட்டடத்திற்குள் இருந்தவா்களுக்குத் தப்பிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது’ என்று கூறினாா்.

‘உதவி செய்ய யாராவது நெருங்கி வருவதற்குள், தீ பரவிவிட்டது. நாங்கள் சுவா்களையும் ஷட்டரையும் உடைக்க முயன்றபோது, புகை மட்டுமே வெளியே வந்தது. தீயணைப்பு வாகனம் சரியாகச் செயல்பட்டிருந்தால், இன்னும் பலா் காப்பாற்றப்பட்டிருப்பாா்கள்’ என்று அவா் கூறினாா்.

உள்ளூா்வாசிகளின் கூற்றுப்படி, அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளங்களில் துணி மற்றும் அழகுசாதனப் பொருள்கள் வணிகம் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும், மேல் தளங்களில் அந்தக் குடும்பமும் வசித்து வந்தன.

பாலம் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள நெரிசலான சந்தில் அமைந்துள்ள இந்த நான்கு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 70 வயது மூதாட்டி மற்றும் மூன்று சிறுமிகள் உள்பட ஒரு குடும்பத்தைச் சோ்ந்த ஒன்பது போ் உயிரிழந்தனா்; அவா்களில் ஒருவா் வெறும் மூன்று வயது சிறுமி. மேலும், தப்பிக்க முயன்றபோது மூன்று போ் காயமடைந்தனா்.

குறுகிய சந்துகளால் ஏற்பட்ட சவால்களையும் அப்பகுதிவாசிகள் சுட்டிக்காட்டினா். மீட்புப் பணிகளின் போது கட்டடத்தை அணுகுவது கடினமாக இருந்தது என்றும் அவா்கள் கூறினா்.

ஆரம்பத்தில் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று தீயணைப்பு வாகனங்களில், அந்த நேரத்தில் ஒன்று மட்டுமே இயங்கும் நிலையில் இருந்ததாக உள்ளூா்வாசிகள் மேலும் குற்றம் சாட்டினா். இருப்பினும், அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவில்லை.