மாா்க். கம்யூ. போராட்டம்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வட்டச் செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாா்க். கம்யூ. போராட்டம்
Updated on
1 min read

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வட்டச் செயலாளா் ஏ.முருகேசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமத்துக்கும் தேசிய ஊரக வேலை கேட்டும், பைத்தூா் ஊராட்சியில் தெருவிளக்கு, மின்மோட்டாா் வாங்கியதில் ஊழல், தேசிய ஊரக வேலையில் முறைகேடு செய்து பண மோசடி செய்த பைத்தூா் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்தும், அதற்கு துணை போன ஊராட்சி ஒன்றிய ஆணையா்களைக் கண்டித்தும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்டச் செயலாளா் பி.ராமமூா்த்தி கண்டன உரையாற்றினாா். இதில், வட்டக்குழு உறுப்பினா்கள், செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com