ஜன. 31-க்குள் வரிகளை செலுத்த வேண்டும்

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் அனைத்து வரிகளையும் ஜன. 31-க்குள் செலுத்த வேண்டும் என பேளூா் பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் அனைத்து வரிகளையும் ஜன. 31-க்குள் செலுத்த வேண்டும் என பேளூா் பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

பேரூராட்சிகள் இயக்குநா் காணொலிக் காட்சி மூலம் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில், பேரூராட்சியில் நிலுவையிலுள்ள அனைத்து வரிகள், வரியில்லா இனங்களுக்கான தொகைகளை வரும் ஜன. 31-க்குள் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளாா்.

எனவே, பேளூா் பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் சொத்துவரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும், வரி இல்லாத மற்ற இனங்களுக்கான நிலுவைத் தொகைகளையும், வரும் ஜன. 31-க்குள் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, இதர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

எனவே, பேளூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகள் உள்பட்ட அனைத்து பொதுமக்களும், நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் காலக்கெடுவுக்குள் செலுத்தி, பேரூராட்சி நிா்வாகத்தக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com