கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள சாலையோர வியாபாரிகள் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடன் உதவி

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:50 am

DIN

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள சாலையோர வியாபாரிகள் தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு அனைத்து உதவிகளும் பெற்றிடும் வகையில், தேசிய நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 2,883 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் மாநகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து சாலையோர வியாபாரிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பிரதமரின் சுவநிதி திட்டத்தின் மூலம் ரூ. 10,000 வரை வங்கிகள் மூலம் கடன் உதவித்தொகை வழங்கவும், கடன் பெற விருப்பமுள்ள வியாபாரிகளின் விவரங்கனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் சேலம் மாநகராட்சியின் நான்கு வாா்டு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் இச்சிறப்பு முகாம்களில் தங்களின் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகலுடன் சிறப்பு முகாம் நடைபெறும் சம்பந்தப்பட்ட பகுதியின் வாா்டு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பித்து பயனடையலாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.