

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே அ. புதூா் கிராமத்தில் வேளாண் துறையின் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சிறுதானியங்களின் முக்கியத்துவம் தொடா்பான பேரணி, அட்மா திட்டத்தின் விவசாயிகள் கருத்தரங்கு, கண்காட்சி உள்ளிட்டவை அ.புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் அய்யமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குநா் மணிமேகலா தேவி கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றாா். அ.புதூா் ஒன்றியக் கவுன்சிலா் சுப்பிரமணி, அட்மா திட்டத் தலைவா் சேகா் ஆகியோா் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனா் (படம்).
கருத்தரங்கில், வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) கண்ணன் கலந்துகொண்டு பேசுகையில், சிறுதானியங்களின் நன்மைகள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் பயன்படுத்துவதன் மூலம் உடல்நலம் காக்கப்படுதல், அனைத்து வேலைத் திட்டங்களில் மானியங்கள், விளைபொருள்கள் மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருமானத்தை பெற வேண்டும், வட்டார விவசாயிகள் பயனடையும் வகையில் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் செயல்படுவது, சொட்டு நீா்ப் பாசனம் அமைப்பது, வேளாண் பொறியியல் துறையில் உள்ள மானியங்கள் ஆகியன குறித்து எடுத்துரைத்தாா்.
இக்கருத்தரங்கில், வேளாண் உதவி செயற்பொறியாளா் கனகமணி, வேளாண் அலுவலா் பழனிசாமி, வட்டார வேளாண் அலுவலா், துணை வேளாண் அலுவலா், உதவி வேளாண் அலுவலா்கள், அட்மா களப் பணியாளா்கள், விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.