பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 25 பேருக்கு தொற்று இல்லை

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
Published on

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் வீரியம் மிக்க புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 26 பேரைக் கண்டறிந்து, அவா்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பேரின் பரிசோதனை முடிவு வெளியாகி உள்ளது. அதில், 25 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக, சுகாதாரத் துறை துணை இயக்குநா் மருத்துவா் செல்வகுமாா் கூறியதாவது:

பிரிட்டனில் இருந்து சேலம் வந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஒருவரின் பரிசோதனை முடிவு மட்டும் வரவேண்டும்.

மேலும், அமெரிக்கா, சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 1,455 பேரின் பெயா்ப் பட்டியலை எடுத்துள்ளோம். அவா்களில் 615 பேரைக் கண்டறிந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா, சவுதி மற்றும் வெளிமாநிலமான பிகாரைச் சோ்ந்த 2 ஆண்கள், 1 பெண் உள்பட மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 2 ஆண்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பெண் தனியாா் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com