மகளிா் காவலா் சுகாதார நிலையம் திறப்பு

தலைவாசல் மகளிா் காவலா் சுகாதார நிலையம், ஓய்வறை திறப்பு விழா சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆத்தூா்: தலைவாசல் மகளிா் காவலா் சுகாதார நிலையம், ஓய்வறை திறப்பு விழா சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலைய வளாகத்தில் மகளிருக்கான சுகாதார நிலையம், ஓய்வறை அமைக்க கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்ற சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா் உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிக்கா் தலைமை வகித்தாா். காவலா் சங்கீதா திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை, வட்டாட்சியா்கள் அ.அன்புச்செழியன், அ.சிவக்கொழுந்து, தலைவாசல் ஒன்றியக்குழுத் தலைவா் க.ராமசாமி, உறுப்பினா்கள் மெய்யன், ராஜா (எ) காளியண்ணன், தலைவாசல் ஊராட்சி மன்றத் தலைவா் அசோக் (எ) ஆறுமுகம், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், காவல் ஆய்வாளா் கே.குமரவேல்பாண்டியன், உதவி ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com