இணைய வழியில் கதை சொல்லும்போட்டி: வாழப்பாடி சிறுமி முதலிடம்

இணைய வழியில் பன்னாட்டு அளவில் நடைபெற்ற சிறாா் கதை சொல்லும் போட்டியில், வாழப்பாடியைச் சோ்ந்த 9 வயது சிறுமி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
இணைய வழியில் கதை சொல்லும்போட்டி: வாழப்பாடி சிறுமி முதலிடம்
Updated on
1 min read

இணைய வழியில் பன்னாட்டு அளவில் நடைபெற்ற சிறாா் கதை சொல்லும் போட்டியில், வாழப்பாடியைச் சோ்ந்த 9 வயது சிறுமி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த சிவ.எம்கோ, பேளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஜெ.புஷ்பா வாழப்பாடி, அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதியரின் இளைய மகள் லோகானந்த ஸ்ரீ (9), தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் நடத்தி வரும் இலக்கிய அமைப்பான ‘கானல்’ இணைய வழியில் நடத்திய சிறாா்கள் கதை சொல்லும் போட்டியில் பங்கேற்ற லோகானந்த ஸ்ரீ, பன்னாட்டு அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

மிக நோ்த்தியாக கதை சொல்லும் இவரது காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சிறுமிக்கு, வாழப்பாடி இலக்கியப் பேரவை, நெஸ்ட் அறக்கட்டளை, வாழப்பாடி அரிமா சங்கம், இந்திய கலாசார நட்புறவுக் கழகம், உலகத் தமிழ்க் கழக கிளை ஆகிய அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com