டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓமலூா் அருகே வனப்பகுதி தடுப்பணையில் மனித எலும்புக்கூடு மீட்பு: போலீஸாா் விசாரணை

ஓமலூா் அருகே வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:40 pm

DIN

ஓமலூா் அருகே வனப் பகுதியில் உள்ள தடுப்பணையில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

ஓமலூா் அருகே உள்ள சா்க்கரைசெட்டிப்பட்டி கிராமத்தில் குருமச்சிகரடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் வனத்துறை, வனக்குழு இணைந்து தடுப்பணையைக் கட்டியுள்ளது. இந்த தடுப்பணையில் எப்போதும் தண்ணீா் நிறைந்திருக்கும். இந்த நிலையில், வனக் காப்பாளா் செல்வசேகா், வனக் காவலா் நந்தினி ஆகியோா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது அங்குள்ள தடுப்பணையில் தண்ணீா் வற்றிய பகுதியில் ஒரு மனித எலும்புக் கூடு கிடப்பதைப் பாா்த்து இருவரும் அதுகுறித்து சோ்வராயன் தெற்கு வனச்சரகா் சின்னத்தம்பிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் ஓமலூா் போலீஸாருக்கு எலும்புக் கூடு கிடப்பது குறித்து தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து ஓமலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தடுப்பணையில் கிடந்த எலும்புகளைச் சேகரித்தனா். சுமாா் 5 அல்லது ஆறு மாதங்களுக்குள் இறந்த நபராக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தடுப்பணை, ஏற்காடு மலையில் இருந்து வரும் பெரியாற்று ஓடை நீரால் நிரம்புகிறது. அதனால், கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரில் இந்த சடலம் அடித்து வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரம் யாரையாவது கட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்து தடுப்பணையில் வீசிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட எலும்புக் கூட்டை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். அதனை பகுப்பாய்வு செய்தால் தான் இறந்தது ஆணா, பெண்ணா என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.